India
போராட்டம் நடத்திய மாணவி : தலை முடியை பிடித்து இழுத்துச் சென்ற போலிஸ் - தெலங்கானாவில் அதிர்ச்சி!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இங்கு நீதிமன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளது.இந்த மரங்களை வெட்டித்தான் புதிய கட்டடம் கட்டமுடியும்.
இதனால் புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது போராட்டத்திற்குள் நுழைந்த போலிஸார் அவர்களை விரட்டியடித்துள்ளனர். அப்போது மாணவி ஒருவர் போலிஸாரிடம் இருந்து சிக்காமல் இருக்க தப்பிச் ஓடியுள்ளார். அவரை இரண்டு பெண் போலிஸார் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
பின்னர் அருகே சென்ற போலிஸார் மாணவியின் தலை முடியைப் பிடித்து இழுத்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவிக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலானதை அடுத்து போலிஸாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
டிட்வா : Orange Alert -ல் இருந்து Red Alert... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை விடுமுறை.. - விவரம்!