India
போராட்டம் நடத்திய மாணவி : தலை முடியை பிடித்து இழுத்துச் சென்ற போலிஸ் - தெலங்கானாவில் அதிர்ச்சி!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இங்கு நீதிமன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளது.இந்த மரங்களை வெட்டித்தான் புதிய கட்டடம் கட்டமுடியும்.
இதனால் புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது போராட்டத்திற்குள் நுழைந்த போலிஸார் அவர்களை விரட்டியடித்துள்ளனர். அப்போது மாணவி ஒருவர் போலிஸாரிடம் இருந்து சிக்காமல் இருக்க தப்பிச் ஓடியுள்ளார். அவரை இரண்டு பெண் போலிஸார் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
பின்னர் அருகே சென்ற போலிஸார் மாணவியின் தலை முடியைப் பிடித்து இழுத்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவிக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலானதை அடுத்து போலிஸாருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!