India
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - AIIMS அதிகாரி இடை நீக்கம் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
பிறகு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி எய்ம்ஸ் நிர்வாகி அதிகாரியைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இப்புகாரை அடுத்து நிர்வாக அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எய்ம்ஸ் வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலியல் புகாரை விசாரிக்க 9 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!