India
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - AIIMS அதிகாரி இடை நீக்கம் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
பிறகு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி எய்ம்ஸ் நிர்வாகி அதிகாரியைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இப்புகாரை அடுத்து நிர்வாக அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எய்ம்ஸ் வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலியல் புகாரை விசாரிக்க 9 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!