India
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - AIIMS அதிகாரி இடை நீக்கம் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
பிறகு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி எய்ம்ஸ் நிர்வாகி அதிகாரியைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இப்புகாரை அடுத்து நிர்வாக அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எய்ம்ஸ் வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலியல் புகாரை விசாரிக்க 9 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!