India
பணி நீக்கம் செய்யப்பட்ட திருநங்கை : விளக்கம் அளிக்க பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியை சேர்ந்தவர் ஜேன் கௌஷிக் (31). திருநங்கையான இவர், ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளார். இந்த சூழலில் அம்மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக வேலை கேட்டு விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால் இவரது பாலினத்தை காரணம் காட்டி பல பள்ளிகளில் இவர் நிராகரிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு உமாதேவி அகாடமி என்ற பள்ளியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அங்கே அவரை வேலைக்கு எடுத்துக்கொண்டனர். ஆனால் அவர் அவருடைய திருநங்கை என்ற அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியிருந்தது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து அங்கே பணிக்கு சேர்ந்தார்.
அந்த பள்ளியில் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியராக இவர் பணிக்கு சேர்ந்த பிறகு சில நாட்கள் நன்றாக சென்றுகொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள் பள்ளி தலைமை அவரை அழைத்து, உங்களுடைய திருநங்கை அடையாளம் இங்கிருக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு தெரிந்து என்றும், எனவே பள்ளியை விட்டு நீங்களே சென்று விடுமாறும் கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு அதிர்ந்த அவரும் சமாதான படுத்த முயன்றுள்ளார். ஆனால் வேறு வழியின்றி பணியில் இருந்து வலுக்கட்டாயம் படுத்தப்பட்டு விலகி கொண்டார். இதைத்தொடர்ந்து மற்ற பள்ளிகளில் முயன்று வந்தார். ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் இவரது பாலினத்தை காரணம் காட்டியே பள்ளிகளில் இருந்து நிராகரிக்கப்பட்டார்.
இருப்பினும் முயற்சியை விடாத இவர், குஜராத்தில் மற்றொரு பள்ளியில் விண்ணப்பித்து பணியில் சேர்ந்த பிறகு, அங்கேயும் பாலினத்தை குறிப்பிட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் விரக்தியடைந்த திருநங்கை ஜேன், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!