India
இது வந்தே பாரத் ரயில்தானா ? கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலால் பயணிகள் அதிருப்தி.. காரணம் என்ன ?
இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
அதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் ரயில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை – கோவை, சென்னை – பெங்களூரு, சென்னை – மைசூர், சென்னை – திருநெல்வேலி, சென்னை – விஜயவாடா என ஐந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலை டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இதுவரை 6 ரயில்கள் சென்றநிலையில், இது 7-வது ரயிலாக இயக்கப்படுகிறது.
ஆனால், அதிக கட்டணம் வசூல் செய்தாலும் வந்தே பாரத் ரயில் இலக்கை அடைய அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது என்ற விமரிசனம் வைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ஆந்திரா குப்பம் வழியாக பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் 410 கி.மீ தொலைவை 6 மணிநேரம் 40 நிமிடங்களில் கடக்கிறது.
அதே நேரம் வந்தே பாரத் ரயில் 380 கி.மீ. மட்டுமே பயணிக்கும் நிலையில் பெங்களூரு சென்றடைய 6 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. இத்தனைக்கும் வந்தே பாரத் ரயில் குறைவான இடங்களிலேயே நிற்கிறது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் பயணிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!