India
சிறுமியை வன்கொடுமை செய்த பா.ஜ.க நிர்வாகி : உத்தரகாண்ட மாநிலத்தில் நிகழ்ந்த கொடூரம்!
உத்தரகாண்ட மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் ராவத். இவர் பா.ஜ.க கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்தாக கமல் ராவத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தான் பா.ஜ.க நிர்வாகி கமல் ராவத் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சட்டமன்றத் தொகுதியில் நடந்துள்ளது.
இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட கமல் ராவத் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து போலிஸார் தேடிவருகின்றனர். சிறுமியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் உடனே தலைமறைவாக உள்ள கமல் ராவத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். பா.ஜ.க நிர்வாகி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!