India
சிறுமியை வன்கொடுமை செய்த பா.ஜ.க நிர்வாகி : உத்தரகாண்ட மாநிலத்தில் நிகழ்ந்த கொடூரம்!
உத்தரகாண்ட மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் ராவத். இவர் பா.ஜ.க கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்தாக கமல் ராவத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தான் பா.ஜ.க நிர்வாகி கமல் ராவத் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சட்டமன்றத் தொகுதியில் நடந்துள்ளது.
இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட கமல் ராவத் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து போலிஸார் தேடிவருகின்றனர். சிறுமியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் உடனே தலைமறைவாக உள்ள கமல் ராவத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். பா.ஜ.க நிர்வாகி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!