India
”RSS,BJP-யை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்" : காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவில் ராகுல் பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் வெற்றி பெறும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்தியாவைச் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்குக் கொண்டு செல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரச. நாட்டின் மக்கள் தொகையில் 50% ஓபிசி, 15% தலித்துகள், 12% பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!