India
”RSS,BJP-யை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்" : காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவில் ராகுல் பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் வெற்றி பெறும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்தியாவைச் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்குக் கொண்டு செல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரச. நாட்டின் மக்கள் தொகையில் 50% ஓபிசி, 15% தலித்துகள், 12% பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!