India
”RSS,BJP-யை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்" : காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவில் ராகுல் பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் வெற்றி பெறும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்தியாவைச் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்குக் கொண்டு செல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரச. நாட்டின் மக்கள் தொகையில் 50% ஓபிசி, 15% தலித்துகள், 12% பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அடுக்குமாடி தொழில் வளாகம் முதல் பொது வசதி மையங்கள் வரை... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
வாழ்வா? சாவா? ஆட்டம், வீணான கனடா வீரரின் அதிரடி சதம்: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த நியூசிலாந்து!
-
மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது என்ன?
-
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!