India
கருணை கொலைக்கு அனுமதி கேட்ட பெண் நீதிபதி : தலைமை நீதிபதிக்கு எழுதிப்பட்ட பரபரப்பு கடிதம்!
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் பணியிடத்தில் நீதிபதி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், இதனால் தனது கருணை கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட்க்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், "மூத்த மாவட்ட நீதிபதி தன்னை மிகவும் அவமரியாதையாக நடத்தினார். அதோடு நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். நான் முற்றிலும் குப்பையாக நடத்தப்பட்டேன். என்ன நடந்தது, ஏன் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள்? என்று யாரும் என்னிடம் கேட்கவில்லை.
இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வரை நடந்த விசாரணைகள் அனைத்தும் கேலிக்கூத்து மற்றும் ஏமாற்று வேலை. இதனால் தேவையற்ற ஒரு புழுவைப் போல உணர்கிறேன். எனவே கண்ணியமான முறையில் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயவு செய்து என்னை அனுமதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண் நீதிபதிக்கே இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளதற்குப் பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!