India
”தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது” : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP வலியுறுத்தல்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா என பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது.
இன்றைய கூட்டத் தொடரில் தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதாவது, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ஒரு மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்பதுதான் இந்த மசோதாவின் சாராம்சம்.
இந்நிலையில் தேர்தல் ஆணையர் நியமனம் மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க சார்பில் திருச்சி சிவா பேசும்போது, "தேர்தல் என்பது 140 கோடி மக்களின் நம்பிக்கை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டதாகத் தேர்தல் ஆணைய மசோதா இல்லை. இந்த மசோதா மூலம் பிரதமர் அல்லது ஒன்றிய அமைச்சர் முடிவு செய்பவரே தேர்தல் ஆணையராக நியமிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது" என பேசினார்.
மேலும் 'அரசுக்கு வளைந்து கொடுக்கும் ஒரு முட்டாளோ ஒரு எடுபிடியோ தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதைத் தடுக்கும் சட்டப்பிரிவு இல்லையென்றால் அரசியல் சாசனத்தால் பயனே இல்லை' என்று டாக்டர் அம்பேத்கர் சொன்ன மேற்கோள்களை குறிப்பிட்டு திருச்சி சிவா பேசினார்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !