India
5 மாநில தேர்தல் : ”Exit Poll முடிவில் ஓங்கும் ‘கை’..” : வெற்றிவாகை சூடப்போகும் காங்கிரஸ் !
இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் (நவம்பர்) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்துக்கு இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் எந்த பிரச்னையும் இல்லாமல் நிறைவடைந்து விட்டது.
5 மாநில தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்தனர். 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தலுக்கு முன்னதாக டிவி9, ஜன் கி பாத், சி ஓட்டர்ஸ், லோக் பல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டன.
இந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு என்று சில நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதன்படி ஜன் கி பாத் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு பின்வருமாறு :
* 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 102 - 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், ஆளுங்கட்சியான பாஜக 100-123 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
* 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 48 - 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ் 40 - 55 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்.
* 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி 42 - 53 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே நாளிதழின் கருத்துக் கணிப்பு பின்வருமாறு :
* ராஜஸ்தான் மாநிலத்தின் 199 தொகுதிகளில் 86-106 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
* சத்தீஸ்கரில் 50-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தனது ஆட்சியை தக்க வைக்கும் என India Today Axis, C-voter, India Tv-CNX, JAN KI BAAT, Republic உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் !
* தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தகவல். கருத்து கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி ஆட்சியமைக்கும் எனவும் தகவல் !
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!