India

ஜாமினில் வெளியே வந்து 19 வயது சிறுமியை கொன்ற வாலிபர் : நாட்டையே அதிர வைத்துள்ள உ.பி கொலை சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் 19 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் சிறுமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்தபோது பகீர் தகவல் வெளிவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியை மூன்று ஆண்டுக்கு முன்பு பவன் நிஷாத் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கில் போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது பவன் நிஷாத் ஜாமினில் வெளியே வந்து, வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என சிறுமி குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார்.

ஆனால் அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற முடியாது என உறுதியுடன் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பவன் நிஷாத் தனது சகோதரர் அசோக்குடன் சேர்ந்து கால்நடைகளை மேய்த்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது சிறுமியைக் கோடாரியால் வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், உ.பியில் உள்ள மிருகங்கள் மிகவும் அச்சமின்றி உள்ளனர். அவர்களுக்குச் சட்டத்தின் மீது பயம் இல்லை. மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இந்த இருண்ட நகரத்தின் இருள் எப்பொழுது விலகும் என பா.ஜ.க அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

Also Read: சாலையில் கிடந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் : மும்பையை அதிரவைத்த சம்பவம் - என்ன நடந்தது?