India
பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் - குடும்பத்தில் நடந்த கொடூர கொலை : குஜராத்தில் அதிர்ச்சி!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தை அடுத்த ஷாலிமார்ஷா கிராமத்தைச் சேர்ந்தவர் அஹேஜாஸ்கான். இவர் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி குரேஷாபானு. இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கணவன் அஹேஜாஸ்கானுக்கு சரியான வேலை இல்லாததால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குடும்பம் நடத்துவதிலும் பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளது.
இதையடுத்து சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் ஆட்டோவில் இருந்த ஸ்க்ரூ ட்ரைவர் ஒன்றை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
அப்போது இதைப்பார்த்த அவரது குழந்தைகள் அலறியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்த போது குரேஷாபானு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். அவரை அருகே இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியைக் கொலை செய்த அஹேஜாஸ்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான வேலை இல்லாததால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!