India
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டெலிவரி பாய் : துப்பாக்கியால் சுட்டு கைது செய்த டெல்லி போலிஸார் !
டெல்லி அருகிலுள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபைலில் ஆப் மூலம் மளிகை பொருள்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த மளிகை பொருள்களை சுமித் சிங் என்ற டெலிவரி பாய் கொண்டு வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்து அந்த பொருள்களை இளம்பெண்ணிடம் சுமித் சிங் ஒப்படைத்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்துகொண்ட அந்த நபர் அத்துமீறி இளம்பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு தனியாக இருந்த அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சுமித் சிங் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் , அவர் இருக்கும் இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்தனர். பின்னர் அவரை கைது செய்யமுயன்றபோது, சுமித் சிங் போலீஸாரிடமிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
உடனடியாக சுதாரித்த போலீசார், அவரை விரட்டி பிடிக்க சென்றபோது சுமித் சிங் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலிஸார் திரும்ப சுமித் சிங் காலில் சுட்டதில், குண்டு காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!