India
மர்மமாக கிடந்த சாக்குமூட்டை : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் !
மும்பை வடாலாவ் என்ற பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சாக்கு மூட்டை ஒன்று நீண்ட நேரம் கிடந்துள்ளது. இதை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் சாக்குமூட்டையை போலீசார் திறந்துபார்த்தபோது பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்துள்ளது. அந்த சாக்கு மூட்டையில், பெண் ஒருவரின் சடலம் பல துண்டுகளாக வெட்டுப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் உடை முழுவதுமாக எரிக்கப்பட்டிருந்தது.
இந்த சடலத்தை போலிஸார் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகம் அடையாளம் தெரியாத அளவு சிதைக்கப்பட்டுள்ளது யாரும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, பெண்ணின் உடலில் தங்க கம்மல், மோதிரம், வளையல் அப்படியே இருந்ததாகவும், பெண்ணின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மும்பையில் காணாமல் போன பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
-
இது வெறும் டிரெய்லர்தான்... இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி - ஒன்றிய அரசை கதி கலங்க வைத்த கபில் சிபல் !
-
இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை : சர்ச்சையில் தூர்தர்ஷன் தொலைக்காச்சி : CPIM விமர்சனம் !
-
”பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது” : சரத்பவார் கடும் விமர்சனம்!
-
மியான்மர் ராணுவ புரட்சிக்கு உதவிய அதானி நிறுவனம் : நார்ஜெஸ் வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு!