India
பரிசாக பெற்றோர் கொடுத்த கார்.. ஓட்டி செல்லும்போது நடந்த விபரீதம் : இரண்டு நண்பர்கள் பரிதாப பலி!
மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹாஸ்நகர் - அம்பர்நாத் சாலையில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளதாக போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் காருக்குள் சிக்கி இருந்த இரண்டு இளைஞர்களை கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களைப் பரிசோதனை செய்தபோது இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர்களின் ஒருவரின் பெற்றோர் தனது மகனுக்குப் புதிதாக கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது நண்பனை அழைத்துக் கொண்டு புதிய காரை ஒட்டிப்பார்த்துள்ளார்.
அப்போதுதான் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!