India
பரிசாக பெற்றோர் கொடுத்த கார்.. ஓட்டி செல்லும்போது நடந்த விபரீதம் : இரண்டு நண்பர்கள் பரிதாப பலி!
மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹாஸ்நகர் - அம்பர்நாத் சாலையில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கியுள்ளதாக போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் காருக்குள் சிக்கி இருந்த இரண்டு இளைஞர்களை கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களைப் பரிசோதனை செய்தபோது இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர்களின் ஒருவரின் பெற்றோர் தனது மகனுக்குப் புதிதாக கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது நண்பனை அழைத்துக் கொண்டு புதிய காரை ஒட்டிப்பார்த்துள்ளார்.
அப்போதுதான் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!