India
215 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா : அபராதம் விதித்த போக்குவரத்து போலிஸ்!
இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டெக் அவுட் ஆனார். இது ரசிகர்களால் விமர்சனத்திற்குள்ளானது. பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் போட்டியில் சதம் அடித்தார். அடுத்து பாகிஸ்தான் போட்டியில் 63 பந்துகளில் 83 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார் ரோஹித் சர்மா.
இதையடுத்து இன்று புனேவில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது. இதற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா மும்மை - புனே நெடுஞ்சாலையில் தனது காரில் 215 கி.மீ வேகத்தில் ஒட்டியுள்ளார். இதனை அறிந்த போக்குவரத்து போலிஸார் மூன்று அபராத ரசீதுகளை அவருக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!
-
சென்னை விமானநிலையம் - தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக: தமிழச்சி தங்கபாண்டியன்!
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!