India
215 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா : அபராதம் விதித்த போக்குவரத்து போலிஸ்!
இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித் தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டெக் அவுட் ஆனார். இது ரசிகர்களால் விமர்சனத்திற்குள்ளானது. பின்னர் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் போட்டியில் சதம் அடித்தார். அடுத்து பாகிஸ்தான் போட்டியில் 63 பந்துகளில் 83 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தார் ரோஹித் சர்மா.
இதையடுத்து இன்று புனேவில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது. இதற்காக இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா மும்மை - புனே நெடுஞ்சாலையில் தனது காரில் 215 கி.மீ வேகத்தில் ஒட்டியுள்ளார். இதனை அறிந்த போக்குவரத்து போலிஸார் மூன்று அபராத ரசீதுகளை அவருக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!
-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!
-
“பதவியைக் காக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!