India
திடீரென மூளைச்சாவடைந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை : உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரால் நெகிழ்ச்சி !
குஜராத் மாநிலம் சூரத்தில் அமைந்துள்ளது மதினா என்ற பகுதி. இங்கு சேட்டன்பென் சங்கனி - ஹர்ஷ்பாய் என்ற தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில், சேட்டன்பென் சங்கனி சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். இந்த சூழலில் கடந்த அக். 13 அன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த அந்த குழந்தைற்கு எந்த வித அசைவும் இல்லை. இதனால் பயந்துபோன மருத்துவர்கள் சில நேரம், வென்டிலேட்டரில் வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அசைவு, அழுகை என எதுவும் இல்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும் ஏற்படவில்லை. இதையடுத்து குடும்பத்தினரிடம் அந்த குழந்தை மூளைச்சாவடைந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிறந்து வெறும் 4 நாட்களில் பச்சிளம் குழந்தை இறந்துபோன செய்தி கேட்டு பெற்றோர் துடிதுடித்து போனர். இதையடுத்தே தங்கள் குழந்தை வாழவில்லை என்றாலும், அதன் மூலம் பிறர் வாழட்டும் என்ற எண்ணத்தில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் 2 கிட்னி, கல்லீரல், கண்கள் உள்ளிட்டவை தானம் செய்யப்பட்டது.
இதில் 2 கிட்னி, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தைக்கும், கல்லீரல் புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாதக் குழந்தைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உறுப்புகளின் மூலம் மொத்தம் 6 பேருக்கு வாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை திடீரென மூளைச்சாவடைந்ததால், அந்த குழந்தையின் உடல் உறுப்பை குடும்பத்தினர் தானம் செய்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த நிகழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!