India
”மத்திய பிரதேச பா.ஜ.க ஆட்சியில் 1.5 லட்சம் இளம் பெண்கள் மாயம்” : பிரியங்கா காந்தி பகீர் குற்றச்சாட்டு!
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் தேதியை அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் டிச3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை எப்படியாவது வீழ்த்தித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தலைச் சந்திப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறது. ஆனால் 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்டலா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த ஒருவர், தேர்தல் நெருங்கும் போது பழங்குடியின மக்களுக்குச் செருப்பு மற்றும் குடைகளை விநியோகிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கடந்த 18 ஆண்டுகளாக அவர் என்ன செய்து வருகிறார்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்திய பிரதேச பா.ஜ.க ஆட்சியில் 1.5 லட்சம் இளம் பெண்கள் மாயமாகியுள்ளனர். தினமும் 17 பாலியல் சம்பவங்கள் நடக்கிறது. குற்றச்சம்பவங்களில் மத்திய பிரதேசம் முன்னிலையில் உள்ளது." என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!