India
”2024 தேர்தல் காந்திக்கும் கோட்சேவுக்குமான தேர்தல்” .. ராகுல் காந்தி MP அதிரடி பேச்சு!
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் 18 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் அம்மாநிலத்திற்கு எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
இது எல்லாம் சேர்ந்து பா.ஜ.க மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் கூறி வருகிறது. இதனால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான தேர்தல் என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஜாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.இதில், ராகுல் காந்தி எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தன்னை ஓ.பி.சி பிரிவினரின் தலைவர் என்று காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஏன் ஓ.பி.சி பிரிவினரைச் சேர்க்கவில்லை?. ஓ.பி.சி சமூகத்திற்கு எதிரான அரசாகவே பா.ஜ.க உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்து விட்டதாகா பா.ஜ.க சொல்கிறது. ஆனால் இதை சட்டமாக நிறைவேற்ற இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான தேர்தல். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான தேர்தல்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!