India
நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?
இந்தியாவில் இரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு இரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் இரயில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் இரயில் சேவை சென்னை - மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தற்போது சென்னை - நெல்லை இடையே இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்ந்து இன்று நாடு முழுவதும் மொத்தம் முக்கிய நகரங்களில் 9 வழித்தடங்களில் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை வரை இயக்கப்படும் இந்த இரயில் வெறும் 8 மணி நேரத்தில் சென்று விடும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்.2-ம் தேதி வரை முன்பதிவு நிரம்பியுள்ளது.
9 வழித்தடங்கள் என்னென்ன ?
1. சென்னை - நெல்லை,
2. விஜயவாடா - சென்னை,
3. உதய்பூர்- ஜெய்ப்பூர்,
4. ஹைதராபாத் - பெங்களூரு,
5. பாட்னா - ஹவுரா,
6. ராஞ்சி - ஹவுரா,
7. காசர்கோடு - திருவனந்தபுரம்,
8. ரூர்கேலா - புவனேஸ்வர் - புரி,
9. ஜாம்நகர் - அகமதாபாத்
Also Read
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!