India

நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?

இந்தியாவில் இரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு இரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் இரயில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் இரயில் சேவை சென்னை - மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தற்போது சென்னை - நெல்லை இடையே இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்ந்து இன்று நாடு முழுவதும் மொத்தம் முக்கிய நகரங்களில் 9 வழித்தடங்களில் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை - நெல்லை வரை இயக்கப்படும் இந்த இரயில் வெறும் 8 மணி நேரத்தில் சென்று விடும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்.2-ம் தேதி வரை முன்பதிவு நிரம்பியுள்ளது.

9 வழித்தடங்கள் என்னென்ன ?

1. சென்னை - நெல்லை,

2. விஜயவாடா - சென்னை,

3. உதய்பூர்- ஜெய்ப்பூர்,

4. ஹைதராபாத் - பெங்களூரு,

5. பாட்னா - ஹவுரா,

6. ராஞ்சி - ஹவுரா,

7. காசர்கோடு - திருவனந்தபுரம்,

8. ரூர்கேலா - புவனேஸ்வர் - புரி,

9. ஜாம்நகர் - அகமதாபாத்

Also Read: ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த மாணவன்.. தனி அறையில் வைத்து அடித்து கொடுமை படுத்திய ஆசிரியர்கள்!