India
வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுவன்.. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி: உறைந்துபோன பெற்றோர் -உ.பியில் சோகம்!
அண்மைக்காலமாக இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிழப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது அலிகஞ்ச் என்ற பகுதி. இங்கிருக்கும் பள்ளி ஒன்றில் அதிஃப் சித்திக் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழலில் சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் இருக்கும்போது திடீரென சிறுவனுக்கு மூச்சு வாங்கியுள்ளது. இதனால் சிறுவன் சட்டென்று மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய சிறுவனை கண்டதும் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், உடனடியாக இதுகுறித்து ஆசியர்களுக்கு தெரிவித்தனர்.
விரைந்து வந்த ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!