India
நீங்கள் அறிவியலை கொண்டாடும் அழகு இதுதானா ? : மக்களவையில் பா.ஜ.கவினரை கதறவிட்ட ஆ.ராசா MP!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 ஆம் தேதி தொடங்கியது. வரும் செப் 22-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முதல்நாள் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரியா விடை கொடுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. பின்னர் விவாதம் முழுமையாக முடிவடைந்த பிறகு நேற்று மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் 454 உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
இன்று சந்திரயான் 3 திட்டம் வெற்றி தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும் போதும்," சந்திரயான் வெற்றி பல்வேறு விதமான புனைவு கதைகள் உண்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது.
மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வீரமுத்துவேல் ஆகியோர் சந்திரயான் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.மூவரும் பிரபலமான கல்லூரிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளிலும் அரசுக் கல்லூரியிலும் பயின்றவர்கள். அவர்களுக்கு இந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது. தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் தெரியும். தமிழ்நாட்டின் சாதாரண பகுதிகளிலிருந்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். இந்த பெரும் உயரத்தை எட்டியுள்ளனர்.
நிலவில் சந்திரயான் தரையிறங்கியிருப்பதை ஒரு பக்கம் பிரதமர் கொண்டாடுகிறார். அதே நேரத்தில் அறிவியலுக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத குலக்கல்வி திட்டமான 'விஸ்வகர்மா யோஜனா திட்டம்’ கொண்டு வருகிறார். இது தான் நீங்கள் அறிவியலை கொண்டாடும் அழகா?. நிலவில் தரையிறங்கிய எந்த நாடும் உங்களைப்போல் மதம் சார்ந்து பெயர் சூட்டவில்லை. நீங்களும் இதை கருத்தில்கொண்டு சந்திரயான் -3க்கு விக்ரம் சாராபாய் பெயரை சூட்டுங்கள்" என தெரிவித்தார்.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !