India
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் பெண்கள் காத்திருப்பார்கள்?.. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சோனியா காந்தி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 ஆம் தேதி தொடங்கியது. வரும் செப் 22-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முதல்நாள் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரியா விடை கொடுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா சாந்தி எம்.பி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் ராஜிவ்காந்திதான்.
மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 13 ஆண்டுகளாக தங்களது அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்போது நிறைவேற்றிய மசோதாபோல் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா இல்லை.
விடுதலை போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்றனர். பெண்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தே ஆக வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news
-
”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது" : ரேபரேலியில் ராகுல் காந்தி அனல் பேச்சு!
-
விடியல் பயண திட்டம் - பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மோடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
”பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது இந்தியா வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
”தினந்தோறும் விதவிதமாகப் படம் காட்டும் மோடி” : வெளுத்து வாங்கிய முரசொலி!