India

விடாத மாமியார் மோதல்.. விபரீத முடிவெடுத்த பெண் வழக்கறிஞர்.. வழக்குகளை புறக்கணித்த சக வழக்கறிஞர்கள் !

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் ஹீனா பானோட் (28). பெண் வழக்கறிஞராக இருக்கும் இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவருக்கு ஒரு மகள் உள்ளார். ஹீனா, தனது கணவர் மற்றும் மகளுடன் ஜபால் சாலையில் உள்ள கிரான்ட் சிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த சில மாத காலமாக ஹீனா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை ஹீனா, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹீனாவின் தற்கொலை குறித்து போலீசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்கையில் தனது தற்கொலைக்கு காரணம் தனது மாமியார், மாமனார் என்று குறிப்பிடப்பட்டிருந்த கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அதன்பேரில் ஹீனாவின் மாமியார், மாமனார், கணவர் உள்ளிட்டோரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் வழக்கறிஞர், தந்தையும் நீதிபதியின் உதவியாளர் என்பதால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹீனாவின் மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த புதன்கிழமை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: இ- வாலட் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?.. டிஜிட்டல் பயனாளர்களுக்கான 5 முக்கிய ஆலோசனைகள்!