India

மாரடைப்பு ஏற்பட்டு 12 வயதில் உயிரிழந்த பள்ளி சிறுவன்.. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்!

குஜராத் மாநிலம் விஜாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் துஷ்யந்த் பிப்ரோதர், 6 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சிறுவனின் தாய் வழக்கம்போல் தனது வேலைகள் செய்யத் தொடங்குவதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்துள்ளார்.

அப்போது வீட்டின் முற்றத்தில் மகன் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பெற்றோர்கள் மகனைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவன் இறப்பிற்கு மாரடைப்பு காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சிறிய வயதில் எப்படி மாரடைப்பு வந்தது என்று தெரியாமல் சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் துஷ்யந்த் பிப்ரோதர் இறப்பை அடுத்து அவர் படித்து வந்த பள்ளியில் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாரடைப்பு காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உயிர் பலி வாங்கும் நீட்: மேலும் ஒரு மாணவி விபரீத முடிவு.. ஒரே ஆண்டில் ஒரே பகுதியில் 25 மாணவர்கள் தற்கொலை