India
பிரியாணிக்கு தயிர் பச்சிடி கேட்டதால் தகராறு.. வாலிபர் அடித்துக் கொலை: ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பிரியாணி கடை ஒன்றுக்கு லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இவர்களுக்குக் குறைவாகத் தயிர் பச்சிடி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் லியாகத் கூடுதலாகத் தயிர் பச்சிடி கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். மேலும் லியாகத்தை சில ஊழியர்கள் தனியாக அறைக்கு இழுத்துச் சென்று அடித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர்களிடம் இருந்து லியாகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் IPL-ல் விளையாடுவார் - CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கருத்து !
-
”பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் நரேந்திர மோடி” : ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி ஆவேச பேச்சு!
-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு ரூ.1 லட்சம் ஓய்வு ஊதியம் : பெரியார் பல்கலை. உத்தரவால் சர்ச்சை!
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!