India
பிரியாணிக்கு தயிர் பச்சிடி கேட்டதால் தகராறு.. வாலிபர் அடித்துக் கொலை: ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பிரியாணி கடை ஒன்றுக்கு லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இவர்களுக்குக் குறைவாகத் தயிர் பச்சிடி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் லியாகத் கூடுதலாகத் தயிர் பச்சிடி கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். மேலும் லியாகத்தை சில ஊழியர்கள் தனியாக அறைக்கு இழுத்துச் சென்று அடித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர்களிடம் இருந்து லியாகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!