India
ஜி20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத்: உலக நாடுகள் முன்பு இந்தியா பெயரை தவிர்த்த மோடி அரசு!
மோடி தலைமையிலான ஒன்றிய அரச ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைச் செயல்படுத்தி வருவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில்தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
தற்போது கூட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் பெயரையும் பாரத் என்று மாற்ற முயல்கிறது. இந்த மற்றத்திற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளதுதான். இந்த பெயைரை எதிர்க்கட்சிகள் வைத்ததில் இருந்தே பா.ஜ.கவினர் இந்தியா என்ற பெயரை தவிர்த்து பாரத் என்று சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி-20 மாநாடு இன்று தொடங்கியுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களின் முன்பு அவரவர் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாக "பாரத்" என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் ஜி20 தலைவர்களைக் குடியரசு தலைவரால் விருந்துக்கு அழைக்கும் அழைப்பிதழிலும் பாரத் குடியரசு தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜி-20 மாநாட்டின் மைய அரங்கில் இந்தியா என்பதற்குப் பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெயர் பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றாதபோது எப்படி ஜி20 மாநாட்டில் பாரத் என்ற பெயரைப் பயன்படுத்த முடியும் என எதிர்கட்சிகள் ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!