India
தலையில் தடவிய எண்ணெய்.. கையோடு கொத்து கொத்தாக வந்த முடி: பியூட்டி பார்லரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இன்றைய சமூகத்தில் பெண்கள் தங்களை அழகாகவும், அழகுபடுத்தவும் அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். இதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஃபேஷியல், ஹேர் கட்டிங், ஃபேஸ் பேக் செய்து கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் பியூட்டி பார்லர்களில் தரமான பொருட்கள் பயன்படுத்தாத காரணமாக பெண்கள் பலருக்கும் முடி கொட்டுவது மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு உடல் உபாதை சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
இந்நிலையில் இளம் பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் அவரது முடியை வெட்டுவதற்காகத் தலையில் எண்ணைத் தடவியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்திலேயே தலையில் கைவைத்தபோது முடி கொத்து கொத்தாக கையோடு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் பியூட்டி பார்லர் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும், பியூட்டி பார்லர் மூடவேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!