India
தலையில் தடவிய எண்ணெய்.. கையோடு கொத்து கொத்தாக வந்த முடி: பியூட்டி பார்லரில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இன்றைய சமூகத்தில் பெண்கள் தங்களை அழகாகவும், அழகுபடுத்தவும் அதிகமாகக் கவனம் செலுத்துகிறார்கள். இதற்காக பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஃபேஷியல், ஹேர் கட்டிங், ஃபேஸ் பேக் செய்து கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் பியூட்டி பார்லர்களில் தரமான பொருட்கள் பயன்படுத்தாத காரணமாக பெண்கள் பலருக்கும் முடி கொட்டுவது மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அவர்களுக்கு உடல் உபாதை சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
இந்நிலையில் இளம் பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் அவரது முடியை வெட்டுவதற்காகத் தலையில் எண்ணைத் தடவியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்திலேயே தலையில் கைவைத்தபோது முடி கொத்து கொத்தாக கையோடு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் பியூட்டி பார்லர் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும், பியூட்டி பார்லர் மூடவேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!