India
பள்ளி மாணவி பேக்கில் லவ் லெட்டர், தண்ணீர் பாட்டிலில் சிறுநீர்.. சக மாணவர்கள் செயலால் கொந்தளித்த மக்கள்!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்களும் படிக்கும் இங்கு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர். aந்த அந்தவகையில் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் தண்ணீர் பாட்டிலில் சக மாணவர்களே சிறுநீர் நிரப்பி வைத்துள்ள சம்ப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் படிக்கும் அந்த மாணவி மதிய உணவு சாப்பிட தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்றும் மாணவி தனது வீட்டுக்கு உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது தனது பேக்கை வகுப்பறையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை கண்ட அவருடன் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் மாணவியின் பேக்குக்குள் காதல் கடிதத்தை வைத்துள்ளனர்.
மேலும் மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். இவையேதும் தெரியாமல் மாணவி மீண்டும் பள்ளிக்கு வந்து தனது பாட்டிலில் தண்ணீர் குடித்துள்ளார். அப்போது நாற்றம் அடித்துள்ளது. இதனை கண்ட அந்த மாணவர்கள் உடனே மாணவியிடம் நடந்ததை கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அழுதுகொண்டே பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் அவரோ இதனை சரியாக கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவி தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே, ஆத்திரம் கொண்ட அவர்கள் சம்மந்தப்பட்ட மாணவர் வீட்டுக்கு கட்டை, காம்புகள் உள்ளிட்டவைகளுடன் சென்று தாக்க முற்பட்டனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவியின் உறவினர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போதும் கோபத்தில் இருந்த மக்கள், கற்களை போலீசார் மீதும் வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
#சந்தேஷ்காளி : பெண்ணை மிரட்டி பாலியல் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்த பாஜக : வெளிவந்த வாக்குமூலம் !
-
முதலில் எய்ம்ஸ், இப்பொது சென்னை மெட்ரோ : தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு !
-
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா-வில் நிறைவேறிய தீர்மானம் !
-
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும் : யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தால் அதிர்ச்சி!
-
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த சாய் சுதர்சன் : IPL தொடரில் எழுச்சி பெற்ற தமிழ்நாடு வீரர் !