India
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 35 வயது வாலிபரை அடித்துக் கொன்ற தந்தை : ஒடிசாவில் பகீர்!
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்திற்குட்பட்ட புல்பானியில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் கட்டடவேலைகள் நடந்துள்ளது. இங்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது நபர் கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்குவதற்காக வந்துள்ளார்.
இவர் கட்டடவேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா இருவரும் குற்றவாளியைத் தடிகளால் அடித்து கொலை செய்துள்ளது. பின்னர் இருவரும் காவல்நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளனர்.
பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!