India

கணவரை காணவில்லை : புகார் கூறிய மனைவி.. போலிஸார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை ! நடந்தது என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் அடுத்துள்ளது கஜ்ரவ்லா என்ற பகுதி. இங்கு ராம்பால் - துலாரோ தேவி தம்பதி வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், ஆரம்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருந்துள்ளது. நாளடைவில் வழக்கமான குடும்ப சண்டையாக அது உருமாறியது.

இருப்பினும் இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் பிறந்தனர். ஆனாலும் இவர்களுக்குள் இருக்கும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இந்த சூழலில் ராம்பாலின் நண்பரின் அறிமுகம் தேவிக்கு கிடைத்துள்ளது. இவர்களுக்குள் பழக்கம் ஏற்படவே அது காதலாகி மாறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மனைவி மீது ராம்பால் சந்தேகம் அடைந்துள்ளார். தொடர்ந்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதங்கள் நடந்துள்ளது. இந்த சூழலில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை நிலவியுள்ளது. இதனால் ஆத்திரமடைந் தேவி, தனது கணவரை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி அவர் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் கட்டிலோடு தனது கணவரை கட்டிபோட்டுள்ளார்.

பின்னர் தனது வீட்டில் இருக்கும் கோடாரியை வைத்து துண்டு துண்டாக வெட்டி, அதனை கால்வாயில் வீசியுள்ளார். அதோடு தனது கணவர் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து நாடகமாடியுள்ளார். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புதிதாக வாங்கிய பைக் : நேற்று REELS.. இன்று RIDE.. சாலை விபத்தில் பிரபல இளம் நடிகருக்கு நேர்ந்த சோகம் !