India
தெரு நாயிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்.. CCTV ஆதாரத்துடன் கைது செய்த போலிஸ்!
பஞ்சாப் மாநிலம், மோகா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார். இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனால் தெரு நாய் எப்படி இறந்தது என அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் குமார், இந்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதேபகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் தெரு நாயிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். தெரு நாயை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!