India
தெரு நாயிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்.. CCTV ஆதாரத்துடன் கைது செய்த போலிஸ்!
பஞ்சாப் மாநிலம், மோகா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார். இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனால் தெரு நாய் எப்படி இறந்தது என அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் குமார், இந்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதேபகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் தெரு நாயிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். தெரு நாயை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”கள்ள மவுனம் பழனிசாமிக்கு கைவந்த கலை” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
-
“வாய் தவறி கூறிவிட்டேன்...” - கடவுளே மோடியின் பக்தர் என்ற விவகாரம் : பாஜக வேட்பாளர் புதிய விளக்கம்!
-
“கடவுளே எங்க மோடி பக்தர்” - பாஜக வேட்பாளர் பேச்சுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் -மக்கள் வலியுறுத்தல்!
-
“அந்த கடவுளே எங்க மோடியின் பக்தர்தான்...” - எல்லை மீறிய பாஜக வேட்பாளருக்கு குவியும் கண்டனம் !
-
“மோடிக்கு ஏற்றாற்போல் விதிகளை வளைத்த தேர்தல் ஆணையம்... வெட்கக்கேடானது” - குவியும் கண்டனம்!