India
3 பெண் பிள்ளைகள்.. மாதக்கணக்கில் மனைவியை பட்டினியுடன் சிறை வைத்த கணவர்.. காரணம் என்ன ?
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்துள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் சந்த் பாஷா. இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் இவருக்கும் இவரது பக்கத்து ஊரை சேர்ந்த சபீஹா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அடுத்த ஆண்டே குகுழந்தை பிறந்தது.
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், பெண் குழந்தை பிறந்தது. இதனால் மீண்டும் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணினார் சந்த் பாஷா. இப்படியே 2-வது குழந்தையும், 3-வது குழந்தையும் பெண் பிள்ளையாகவே பிறந்ததால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சண்டை காரணமாக சபீஹா அடிக்கடி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார்.
அவ்வாறு செல்லும்போது அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டு செல்வர் சபீஹாவின் குடும்பத்தினர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று சமரசம் பேச்சு வார்த்தை நடத்தி, சேர்த்து வைத்தனர். ஆனாலும் அவர் தனது மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். ஆண் பிள்ளை பெற்று கொடுக்கவில்லை என்பதால், சபீஹாவை விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர் சந்த் பாஷாவின் குடும்பத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபீஹாவை அவர்களது வீட்டின் மாடியில் உள்ள சின்ன அறையில் சிறை பிடித்து வைத்தனர். மேலும் அவரை அடித்து துன்புறுத்தி, கை விரல்களை உடைத்தும், ஒரு மாதமாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டும் கொடுமை செய்துள்ளனர். சபீஹா குறித்து வெளியே எதுவும் தெரியாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர்.
பின்னர் சபீஹாவின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியோடு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கள் மகளை மீட்டனர். தொடர்ந்து சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சபீஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆண் பிள்ளை பெறாத ஆத்திரத்தில், தனது மனைவியை பட்டினியுடன் ஒரு மாத காலமாக சிறை வைத்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!
-
“தொடர் பாலியல் வன்முறைகள்.. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிடும் முதல்வர் விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
சிறுபான்மையினர் சுதந்திரத்தில் கைவைத்த ‘விஜய்’, மக்களின் கேள்விக்கு பதில் சொல்வாரா? : சா.மு.நாசர் கேள்வி!