India
திருமணத்தில் புகைப்பிடித்து நடனமாடிய மாமியார்.. அதிர்ச்சியில் மணமகன் எடுத்த முடிவு: சோகத்தில் மணமகள்!
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கு ராஜ்புராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதன்படி ஜூன் 27ம் தேதி திருமணத்திற்கான முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
அப்போது மணமகன் வீட்டாரைப் பெண் வீட்டார் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் ஆட்டம் பாட்டத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அந்நேரம் மணமகளின் தாயார் புகைப்பிடித்த படியே நடனமாடியுள்ளார்.
மேலும் புகையை நடனமாடிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப்பார்த்து மணமகனின் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனே மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திருமணம் நின்றதை அடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!