India
7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்.. பள்ளி கழிவறையில் அரங்கேறிய கொடூரம்: பெற்றோர் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு சிறுவர் - சிறுமிகள் படித்து வரும் இங்கு, 7 வயது சிறுமியும் படித்து வருகிறார். வழக்கம்போல் இந்த பள்ளி கடந்த ஜூன் 26-ம் தேதியும் இயங்கியது. அப்போது இந்த 7 வயது சிறுமி, வகுப்பு எடுத்து கொண்டிருக்கும்போது தனது ஆசிரியரிடம் சொல்லி விட்டு இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்றுள்ளார்.
இதனை கண்ட அதே பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவர், சிறுமியின் பின்னாலே சென்றுள்ளார். அங்கே பெண்கள் கழிவறைக்குள் சென்ற அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் மனதை மிகவும் பாதிக்கவே, உடனே பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழுது கொண்டே சென்றுள்ளார்.
அங்கே தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே பள்ளியிலும், காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் சிறுவனை கைது செய்து சிறுவர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட வருகிறது. பள்ளி கழிவறையில் வைத்து 7 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!