India
7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்.. பள்ளி கழிவறையில் அரங்கேறிய கொடூரம்: பெற்றோர் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு சிறுவர் - சிறுமிகள் படித்து வரும் இங்கு, 7 வயது சிறுமியும் படித்து வருகிறார். வழக்கம்போல் இந்த பள்ளி கடந்த ஜூன் 26-ம் தேதியும் இயங்கியது. அப்போது இந்த 7 வயது சிறுமி, வகுப்பு எடுத்து கொண்டிருக்கும்போது தனது ஆசிரியரிடம் சொல்லி விட்டு இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்றுள்ளார்.
இதனை கண்ட அதே பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவர், சிறுமியின் பின்னாலே சென்றுள்ளார். அங்கே பெண்கள் கழிவறைக்குள் சென்ற அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் மனதை மிகவும் பாதிக்கவே, உடனே பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழுது கொண்டே சென்றுள்ளார்.
அங்கே தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே பள்ளியிலும், காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் சிறுவனை கைது செய்து சிறுவர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட வருகிறது. பள்ளி கழிவறையில் வைத்து 7 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!