India
காதல் ஜோடி தற்கொலை.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் குரு பிரசாத். இவர்கள் இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.
பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் குரு பிசாத்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால் தனக்கு நடந்த திருமணத்தை மறைத்து குரு பிரசாத், பவித்ராவை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குரு பிரசாத்திற்குத் திருமணம் நடந்த விவகாரம் பவித்ராவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காதலன் தன்னை ஏமாற்றியதால் மன வேதனை அடைந்த பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் காதலி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குரு பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்தும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!