India
காதல் ஜோடி சுட்டுக்கொலை.. உடலை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய குடும்பம்: விசாரணையில் வெளிவந்த ஆணவக் கொலை!
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்குட்பட்ட ரத்தன்பாசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகன் ராதேஷ்யாம் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இந்த புகாரை அடுத்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
பலமணி நேரம் நடந்த இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலுக்கு ஷிவானியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஷிவானி பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் காதலித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜூன் 3ம் தேதி ஷிவானி மற்றும் ராதேஷ்யாம் இருவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கிராமத்தின் அருகே இருந்த முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலிஸார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!