India
காதல் ஜோடி சுட்டுக்கொலை.. உடலை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய குடும்பம்: விசாரணையில் வெளிவந்த ஆணவக் கொலை!
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்திற்குட்பட்ட ரத்தன்பாசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதேஷ்யாம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகன் ராதேஷ்யாம் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இந்த புகாரை அடுத்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
பலமணி நேரம் நடந்த இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. காதலுக்கு ஷிவானியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஷிவானி பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் காதலித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜூன் 3ம் தேதி ஷிவானி மற்றும் ராதேஷ்யாம் இருவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கிராமத்தின் அருகே இருந்த முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலிஸார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட விவசாயிகள்... மோடி கையாண்ட உத்தி என்ன?
-
மிரட்டலா? அல்லது பதவி ஆசையா? : பா.ஜ.க.விற்கு இழுக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!
-
“ஸ்மிருதி இராணிக்கு வாக்களிக்கக்கூடாது...” - அமேதியில் கூட்டாக சேர்ந்து உறுதி மொழி எடுத்த சமூகத்தினர் !
-
தோல்வி பயத்தால் நீதிமன்றத்தில் பின் வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : விடுவிக்கப்படும் ஊடகவியலாளர்கள்!
-
“மோடிக்கு சமைத்துக்கொடுக்க நான் தயார்...” - உணவு அரசியலுக்கு குட்டு வைத்த மம்தா பானர்ஜி !