India
தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்க நகை திருட்டு.. குற்றவாளிகளை பொறிவைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம், மங்களூர் அருகே முல்கி காவல் சரகம் அய்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஹரீஷ் செட்டி. இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு கிலோ தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஹரீஷ் செட்டி முல்கி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
ஆனால், இதில் போலிஸாருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை. பின்னர் இந்த வழக்கு மாநகர குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் போலிஸாருக்கு தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் தங்கி இருக்கும் இடம் குறித்து போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலிஸார் இரண்டு பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் உடுப்பியைச் சேர்ந்த கணேஷ் நாயக் மற்றும் குடகு மாவட்டம் மடிக்கேரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் இருந்த ஒரு கிலோ தங்க நகைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 55 லட்சம். இவர்களிடம் தொடர்பிலிருந்த மற்ற நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!