India
’3 மாசம்தான்’.. போலிஸாருக்கு கெடு வைத்த ஹரியானா மாநில பா.ஜ.க அரசு: என்ன அது?
ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்த மாநிலத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடல் பருமனாக உள்ள போலிஸார் அடுத்த மூன்று மாதத்திற்குள் உடல் எடையைக் குறைக்கவேண்டும் என உள்துறை அமைச்சர் அணில் விஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், "பல போலிஸார் உடல் பருமனாக இருக்கின்றனர்.
காவல்துறையில் குற்றங்களைத் தடுக்க போலிஸாருக்கு உடல் தகுதி முக்கியம். எனவே அடுத்த மூன்று மாதத்திற்குள் போலிஸார் உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்காக போலிஸார் பணிமாற்றம் செய்யப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசின் இந்த உத்தரவு போலிஸார் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பொதுமக்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர். ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இதேபோன்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பா.ஜ.க.வுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க.. திருநர்களின் குரலை ஒடுக்கும் ஒன்றிய அரசு” : முரசொலி விமர்சனம்!
-
இன்று முதல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா.. 10 அணிகள், 70 லீக் போட்டிகள்… யாருக்கு கோப்பை? - முழு விவரம்!
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!