India
தென் இந்தியாவில் பா.ஜ.கவிற்கு NO.. ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் இழந்த பா.ஜ.க!
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 131 இடங்களிலும், பா.ஜ.க 66 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 131 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
இந்த தேர்தல் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாகப் பிரதமர் மோடி 40 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பேரணியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.
இருப்பினும் 40% ஊழல், கிஜாப் தடை, இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து மற்றும் மதபிரிவினை போன்ற பா.ஜ.கவின் அரசியலை இந்த தேர்தலில் கர்நாடக மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். மேலும் இந்த தேர்தலில் அதிகமான இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.க அமைச்சர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகத்தில் ஆட்சியை இழந்துள்ளதால் தென்னிந்தியாவில் இருந்த ஒரு மாநிலத்தையும் பா.ஜ.க இழந்துள்ளது. தென் மாநிலங்களில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பா.ஜ.க தலைவர்கள் கூறிய நிலையில் தற்போது தென் மாநிலத்தில் பா.ஜ.க முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சியில் உள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் ஆட்சியில் உள்ளது. தெலங்கானாவில் சந்திரசகேர் ராவ் தலைமையிலான பாரதி இராட்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. அதேபோல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது. இதன் மூலம் தென் மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க ஆட்சியில் இல்லை.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!