India
22 பேர் பலி.. சோகத்தில் மூழ்கிய கேரளா: ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கும் மக்கள்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தானூர் பகுதியில் உள்ள கடலில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
இதனால், படகில் முறைகேடாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு படகில் 50க்கும் மேற்பட்டோர் ஏற்றி செல்லப்பட்டுள்ளனர். இந்தப் படகு திடீரென கவிழ்ந்துள்ளது. இதில் படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கியுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை 22 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிலர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மேலும் இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!