India
"என் உயிரை கொடுத்தாவது நாட்டை காப்பாற்றுவேன்"... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமான பேச்சு!
இரமலான் பண்டிகையை முன்னிட்டு மேற்குவங்க மாநிலம் பானர்ஜி நகரின் ரெட்டி ரோட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "வங்காளத்தில் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நாட்டில் பிளவுகளை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் பிளவுகளை உருவாக்க விரும்புவோர் இன்று ஈத் நாளில் உறுதியளிக்கிறேன். என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் நாட்டைப் பிரிக்க விடமாட்டேன்.
யாரோ ஒருவர் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதாகக் கூறுகிறார்கள். முஸ்லீம் வாக்குகளை பிரிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை.
மேற்குவங்க மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஒன்றிய ஏஜென்சிகளுக்கு எதிரான பேராட்டத்தில் ஒருபோதும் தலை குனியமாட்டேன். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தவறினால் அனைத்தும் முடிந்து விடும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!