India
"என் உயிரை கொடுத்தாவது நாட்டை காப்பாற்றுவேன்"... மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமான பேச்சு!
இரமலான் பண்டிகையை முன்னிட்டு மேற்குவங்க மாநிலம் பானர்ஜி நகரின் ரெட்டி ரோட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "வங்காளத்தில் அமைதியை நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நாட்டில் பிளவுகளை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் பிளவுகளை உருவாக்க விரும்புவோர் இன்று ஈத் நாளில் உறுதியளிக்கிறேன். என் உயிரைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் நாட்டைப் பிரிக்க விடமாட்டேன்.
யாரோ ஒருவர் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதாகக் கூறுகிறார்கள். முஸ்லீம் வாக்குகளை பிரிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை.
மேற்குவங்க மாநிலத்தில் என்ஆர்சியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஒன்றிய ஏஜென்சிகளுக்கு எதிரான பேராட்டத்தில் ஒருபோதும் தலை குனியமாட்டேன். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தவறினால் அனைத்தும் முடிந்து விடும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!