India
காணாமல் போன 2 வயது குழந்தை.. பக்கத்து வீட்டு laptop பையை திறந்த பெற்றோருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் நெய்டா பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ்குமார். இவரது மனைவி மஞ்சு. இந்த தம்பதிக்கு மான்சி என 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது குழந்தை மான்சிகாணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு பல இடங்களில் தேடியும் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலிஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தை கடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் பக்கத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் பக்கத்து வீட்டில் சோதனை செய்தனர். அப்போது லேப்டாப் பையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குழந்தை மான்சி சடலம் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு குழந்தையின் சடலத்தை மீட்டு போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பக்கத்து வீட்டுக்காரர் ராகவேந்திராவை போலிஸார் தேடிவருகின்றனர்.
Also Read
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!