India
சச்சின் எந்த விளையாட்டு வீரர்.. குஜராத் மாநில வினாத்தாளில் சர்ச்சை.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் சரவதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரன்களை கடந்து யாரும் படைக்காத சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் சச்சின் டெண்டுல்கர் குறித்த பாடங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது குஜராத் மாநிலத்தில் சச்சின் டெண்டுல்கர் குறித்து தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்று கேட்கப்பட்டுள்ளது.
இதற்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விருப்பங்களில் கிரிக்கெட் குறிப்பிடப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவு தேர்வு கேள்வித்தாள் தயாரிப்பாளர்கள் எப்படி அஜாக்கிரதையாக இருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத் காங்கிரஸ் பட்டியல் சாதி பிரிவு தலைவர் ஹிதேந்திர பிதாடியா இந்த வினாத்தாளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து அதில், இதுதான் குஜராத் மாடலா? எனக் கேட்டு கிண்டல் செய்துள்ளார். மேலும், பல்வேறு சமூகவலைதள வாசிகள் இந்த வினாத்தாளை பதிவிட்டு அரசை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!