India
ஓடும் ரயிலில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ரயில்வே ஊழியரை கைது செய்ய வைத்த ஒரு ட்வீட்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ராணிகேத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெய்சால்மருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே பயிற்சியாளர் ஸ்ரீ பெங்காலி குப்தா என்பவர் இத்தாலி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிறகு அந்த பெண் அவரது பிடியிலிருந்து தப்பித்து கழிவறையில் மறைந்து கொண்டுள்ளார்.
பிறகு தனது இந்திய நண்பரை தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு அவர் ரயிலின் விவரங்களை கேட்டு ரயில்வே அமைச்சகத்தின் ட்வீட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதைப்பார்த்த ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரிகள் உடனே சம்மந்தப்பட்ட ரயில்வே போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பிறகு ராணிகேத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பலோடி என்ற ரயில்நிலையத்திற்கு வந்த போது அங்கு இருந்த ஆர்பிஎப் மற்றும் ஆர்பிஐ அதிகாரிகள் ரயில்வே பயிற்சியாளர் பெங்காலி குப்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆறுமாதம் தடை விதித்துள்ளது. இத்தாலி பெண் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நண்பர் ட்வீட்டரில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்காலி குப்தாவை போலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூகவலைதளங்கள் தீய செயலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இதுபோன்று பலரை காப்பாற்றவும் உதவுகிறது என்பது இந்த சம்பவம் நமக்கு தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!