India
திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமா? .. நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை விளக்கம்!
உலகமே கொரோனா என்னும் கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோயால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சிக்கித் தவித்தது. இந்த தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் மக்களின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதித்தது. தற்போதுதான் உலகமே மூச்சைவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு வருகிறது.
இந்த கொடிய கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்துதான் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் உயிரிழப்பும் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசிதானா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.
மக்களவை உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா காலத்திற்குப் பிறகு திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், "கொரோனா காலத்திற்குப் பிறகு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் ஒன்றிய அரசிடம் இல்லை. அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்குப் பிறகு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும் இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ளவில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!