India
நட்பில் விரிசல்.. தோழியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்: அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
வடகிழக்கு டெல்லியின் நந்த் நாக்ரி பகுதியைச் சேர்ந்தவர் காசிம். வாலிபரான இவர் செல்போன் பழுதுபார்க்கும் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் ஒரு வருடங்களுக்கு மேலாக நட்பாகப் பழகி வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுமி காசிமுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் காசிம் அவரை தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிறுமி வீட்டிற்கு வந்த காசிம் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தான் எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். இதில் சிறுமியின் தோளில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.
பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் உள்ளே வந்து பார்த்தபோது மகள் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த காசிமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நட்பாக பழகிய தோழியை வாலிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!