India
Swiggy -ல் 380 ஊழியர்கள் பணி நீக்கம்.. மன்னிப்பு கேட்ட CEO : தொடரும் Layoff!
அமேசான், ட்விட்டர், பேஸ்புக் போன்ற பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிரடியாகப் பணி நீக்கம் செய்து வருகிறது. இது மென்பொருள் நிறுவனங்களில் மட்டும் நடப்பது இல்லை. பல நிறுவனங்களிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது.
அந்த வகையில் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் இருந்து 380 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,"நிறுவனத்தின் மறுசீரமைப்பு பகுதியாக 380 ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது வருத்தமான ஒன்று. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
உணவு விநியோகத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதனால் லாபம் மற்றும் வருமானம் குறைந்துள்ள காரணத்தாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான ஊழியர்களை பணியமர்த்தியதால் இந்த பிரச்சனை தற்போது எழுந்துள்ளது.
உள்கட்டுமானம், அலுவலகம் மற்றும் வசதிகள் போன்ற செலவுகளைக் குறைக்க நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். எதிர்காலத்திற்கான கணிப்புகளுக்கு ஏற்ப எங்களது ஊழியர்களின் செலவுகளைச் சரியாக அளவிட வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 முதல் 6 மாத ஊதியம் மொத்தமாக வழங்கப்படும். இது அவர்களின் பதவிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!