India

முதலாளி பெயரின் இன்சூரன்ஸ்.. சினிமா பாணியில் நடந்த கொலை - குற்றவாளிகள் போலிஸில் பகீர் வாக்குமூலம் !

தெலுங்கானா மாநிலம் ஃபரூக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஷபதி. இவர் கடந்த 2021ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்துகையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, பிஷபதியின் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவருக்கு கீழ் பணியாற்றிய ஸ்ரீகாந்த், சதீஷ், சம்மன்னா மற்றும் வீட்டின் காவலாளி உட்பட 4 பேரும் அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தான் நடத்தி வந்த நிறுவனத்தின் மூலம் கிரெட் கார்டு, ஆதார் கார்டுகளை வைத்து லோன் வாங்கி கொடுத்து பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஷபதி நிறுவனத்தில் ஸ்ரீகாந்த் சேர்ந்துள்ளார். அப்போது பிஷபதி பெயரில் 50 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து தன்னை நாமினியாக சேர்த்துள்ளார் ஸ்ரீகாந்த்.

இதனையடுத்து பிப்ரவரியில் ஸ்ரீகாந்த் தன்னுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி பிஷபதியின் பெயரி கடன் வாங்கி தனக்கென ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார். பின்னர் பிஷபதிக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரை கொலை செய்துவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெறுவது குறித்து திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி பிஷபதியை நன்றாக மது அருந்த செய்து காரில் அழைத்துச் சென்று தலையில் அடித்து கொலை செய்துவிட்டு, கார் ஏற்றியது போல செட் ஆப் செய்துவிட்டு, அவரின் அடையாள அட்டையும் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் பிஷபதி இன்சூரஸ்சை பெற முயற்சிக்கு நடவடிக்கைகளை காப்பீட்டு நிறுவனம் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில் இத்தகைய கொலை சம்பவம் ஓராண்டு பின்னர் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலிஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !