India
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்.. ஆத்திரத்தில் காரை எரித்த பொதுமக்கள்.. ம.பியில் பரபரப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குல்ஹானே. பாஜக நிர்வாகியான இவர் அக்கட்சியில் நீண்டநாள் உறுப்பினராக இருக்கிறார். மாவு ஆலை நடத்தி வரும் நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு பெதுல் நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
இவர் சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை தேடி இவரின் வீட்டுக்குள் சென்ற நிலையில், பயத்தில் தலைமறைவாகியுள்ளார். இதனால் பொதுமக்கள் ஆத்திரத்தில் இவரின் வீட்டின் முன்னர் இருந்த காரை எரித்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவான அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில், பாஜக பிரமுகர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!