India
“கைத்தறி பொருட்களுக்கு 5% GST.. மகாத்மா காந்தியை ஒன்றிய அரசு அவமதித்துவிட்டது” : MM.அப்துல்லா பேச்சு!
பஞ்சு நூல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும், பருத்தியை யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், அவற்றைக் காதில் வாங்க்கொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு கைத்தறி பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வித்தித்துள்ளது. பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கைத்தறி நெசவாளர்கள், எதிர்க்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கைத்தறி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5% ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யவேண்டும் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தில் பேசிய எம்.எம்.அப்துல்லா, “விவசாயத்தையும், கைத்தறியையும் நாட்டின் இரு கண்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கும் நிலையில், கைத்தறி பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. வரி விதித்து தேசத்தந்தை மகாத்மா காந்தியை ஒன்றிய பா.ஜ.க அரசு அவமதித்துவிட்டது” என விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கைத்தறி பொருட்களுக்கு வரி வித்திருப்பது ஏற்படையது அல்ல, விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்பை பெற்று தருகிறது இந்த கைத்தறித் துறை. 2017ம் வரை முன்பு இருந்த எந்த அரசாங்கம் கைத்தறி பொருட்களுக்கு வரி விதிக்கவில்லை.
பா.ஜ.க அரசு தான் வரியை விதித்து கைத்தறி நெசவாளர்களை வஞ்சிக்கிறது. அதுமட்டுமல்லாது கைத்தறி நெசவாளர்கள் நலத்திட்டங்களையும் புறக்கணித்து வருகிறது. சுற்றுசூழலைக் காக்க பல ஆயிரம் கோடி நிதி செலவிடும் ஒன்றிய அரசு, சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் தயாரிக்கப்படும் கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பது விந்தையாக உள்ளது.
ஏற்கனவே துயரத்தில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களின் துயரை போக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யவேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!